Mountain View Mountain View

கிறிகட்டில் சாதனை நிகழ்த்திய இந்திய வீராங்கனை



நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியா வந்து ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.



ஏற்கனவே மூன்று போட்டிகள் முடிவந்டைந்துள்ள நிலையில் இன்று 4-வது போட்டி தொடங்கியது.

இதில் விளையாடி வரும் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ், ஐந்தாயிரம் ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார். அவர் இன்றைய போட்டியில் 53 ரன்கள் எடுத்திருக்கும் போது இந்த மைல் கல்லை எட்டினார். மிதாலி ராஜ் கடந்த 1999-ம் ஆண்டில் இருந்து விளையாடி வருகிறார். 32 வயதாகும் மிதாலி, மொத்தம் 157 போட்டிகளில் விளையாடி 5 சதம், 37 அரை சதத்துடன் 5029 ரன்கள் எடுத்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் மிதாலி ராஜை விட இங்கிலாந்து வீராங்கனை எட்வர்ட்ஸ் அதிக ரன்கள் எடுத்துள்ளார். இவர், 185 போட்டிகளில் 5812 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இவர் அணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிகட்டில் சாதனை நிகழ்த்திய இந்திய வீராங்கனை  கிறிகட்டில் சாதனை நிகழ்த்திய இந்திய வீராங்கனை Reviewed by Unknown on July 22, 2015 Rating: 5

No comments: