பொதுத் தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 5 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.
இதேவேளை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் பாரதூரமான சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என தேர்தல்கள் செயலக பேச்சாளர் ஒருவர் கூறினார்.
பதிவாகியுள்ள முறைப்பாடுகளின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்காக, அந்த முறைப்பாடுகளை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
தேர்தலின் பின்னரான சட்டமீறல் தொடர்பில் 5 சம்பவங்கள் பதிவு
Reviewed by Unknown
on
August 21, 2015
Rating:
Reviewed by Unknown
on
August 21, 2015
Rating:


No comments: