இலங்கையில் வரட்சி காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அதற்கமைய யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களே இவ்வாறு கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள சுமார் இரண்டு இலட்சத்து 32 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஐந்தரை லட்சம் மக்கள் வரட்சி காரணமாக கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.
இவர்களுக்கான குடிநீர் மற்றும் ஏனைய தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தேவையான நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐந்து மாவட்டங்களில் கடும் வரட்சி ! லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு
Reviewed by Unknown
on
August 22, 2015
Rating:
Reviewed by Unknown
on
August 22, 2015
Rating:


No comments: