Mountain View Mountain View

மட்டக்களப்பு திருமலை பிரதான வீதியில் பஸ்வண்டி விபத்து !

(ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ் )
LATE NEWS
மட்டக்களப்பு-ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  செங்கலடி பிரதேசத்தில்  30.08.2015 முற்பகல் 11.30  மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பயணிகள் பஸ் வண்டியொன்றும் டிப்பர் வண்டியொன்றும் சேமடைந்துள்ளன.


திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கிச் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ் வண்டி (ANU EXPRESS)அதே வழியில் சென்றுகொண்டிருந்த டிப்பர் வண்டியை முந்திச் செல்ல முற்பட்டவேளையில் ஒன்றுடன் மற்றையது மோதி பினனர்  அந்த பஸ் வண்டி வீதியோரமிருந்த தொலைபேசிக் கம்பத்துடன் மோதியுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் தொலைபேசிக் கம்பமும் சேதமடைந்துள்ளது.

எனினும் பஸ்வண்டியில் பயணம்செய்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.




மட்டக்களப்பு திருமலை பிரதான வீதியில் பஸ்வண்டி விபத்து ! மட்டக்களப்பு திருமலை பிரதான வீதியில் பஸ்வண்டி விபத்து ! Reviewed by Unknown on August 31, 2015 Rating: 5

No comments: