Mountain View Mountain View

காத்தான்குடி மோதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

காத்தான்குடி பிரதேசத்தில் இரண்டு அரசியல் கட்சி ஆதரவாளர்களிடையே நேற்றிரவு (21) ஏற்பட்ட மோதல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்போது கடையொன்றிற்கு சேதம் விளைவிக்கப்பட்டமை உட்பட அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

சம்பவத்தின்போது மூவர் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காத்தான்குடி மோதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் காத்தான்குடி மோதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் Reviewed by Unknown on August 23, 2015 Rating: 5

No comments: