காணாமல் போகச் செய்தல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் நடவடிக்கை குழு எதிர்வரும் நவம்பரில் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தக்குழு வருவதாக கூறப்பட்ட போதும் திகதிகள் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்தநிலையில் நவம்பர் 9ஆம் 10ஆம் திகதிகளில் இந்தக்குழு இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான செய்தி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வெளியாகியுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்ய கிடைத்தமை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக குறித்த குழு அறிவித்துள்ளது.
ஏற்கனவே பல தடவைகள் கோரிக்கைகள் முன்னைய அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டிருந்த போதும் அவர் நிராகரிக்கப்பட்டமையை குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்வரும் நவம்பரில் இலங்கை வரும் காணாமல் போனோர் தொடர்பான ஐநா குழு
Reviewed by Unknown
on
September 20, 2015
Rating:
Reviewed by Unknown
on
September 20, 2015
Rating:


No comments: