Mountain View Mountain View

மட்டக்களப்பில் தொடர் மழை: குளங்கள் நிரம்பும் அபாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக உன்னிச்சை மற்றும் உறுகாமம் நீர்பாசன குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக உறுகாம நீர்ப்பாசன பிரிவு பொறியியலாளர் க.அகிலன் தெரிவித்தார்.

உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் 21 அடி 7 அங்குலமாகவும், உறுகாமக் குளத்தின் நீர்மட்டம் 15 அடி 8 அங்குலமாகவும் உயர்வடைந்துள்ளது.

உறுகாமம் குளம் தற்போது முழுமையாக நிரம்பிக் காணப்படுவதனால் தொடர்சியாக மழை பெய்யும் சந்தர்ப்பத்தில்; குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

உறுகாமம் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் சந்தர்ப்பத்தில் சித்தாண்டி, வந்தாறுமூலை, குமாரவேலியார் கிராமம், முறகொட்டாஞ்சேனை போன்ற பிரதேசங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
மட்டக்களப்பில் தொடர் மழை: குளங்கள் நிரம்பும் அபாயம் மட்டக்களப்பில் தொடர் மழை: குளங்கள் நிரம்பும் அபாயம் Reviewed by Unknown on October 27, 2015 Rating: 5

No comments: