Mountain View Mountain View

27.11.2015 அதிகாலை இடம்பெற்ற வான் விபத்து


(ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்)

ஏறாவூர் - மயிலம்பாவெளி பிரதேசத்தில் (27.11.2015) அதிகாலை இடம்பெற்ற வான் விபத்தில்; இரண்டு பேர் பலத்த காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.


அதிகாலை 4.20 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்துக்கு சாரதியின் நித்திரைக் கலக்கமே காரணமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஏழு பேருடன் பயணம் செய்து கொண்டிருந்த வான்; வீதியை விட்டு விலகி மறுபுறத்திலிருந்த மின்சார கம்பத்தில் மோதியதில் மின்சார கம்பம் முறிந்துள்ளது.

இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிக்கான மின் வினியோகம் சுமார் மூன்று மணிநேரம் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூரப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 



27.11.2015 அதிகாலை இடம்பெற்ற வான் விபத்து 27.11.2015 அதிகாலை இடம்பெற்ற வான் விபத்து Reviewed by Unknown on November 29, 2015 Rating: 5

No comments: