ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 18 பேர் பலியானதுடன் சுமார் 43 பேர் வரை படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பக்தாத் நகருக்கு ஒதுக்குப் புறமாகவுள்ள பின்தங்கிய பகுதியிலேயே இக்குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது ஐ.எஸ்.போராளிகளின் திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் தாக்குதல் தொடர்பில் இதுவரை எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பக்தாத் குண்டுவெடிப்பில் 18 பேர் பலி:43 பேர் காயம்
Reviewed by Unknown
on
July 23, 2015
Rating:

No comments: