Mountain View Mountain View

மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகள் !

உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக பயன்படுத்தப்படும் 31 பாடசாலைகளை தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் 31 ஆம் திகதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக முழு அளவில் பயன்படுத்தப்படும் 8 பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக அடுத்த மாதம் 28 ஆம் திகதி திறக்கப்படும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சை திருத்தப்பணிகளுக்காக பயன்படுத்தப்படும் 21 பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் அடுத்த மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 
மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகள் ! மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகள் ! Reviewed by Unknown on August 28, 2015 Rating: 5

No comments: