புண்ணிய பூமியாம் தெட்சண கைலாசமென பெரிதும் பெயர்விளங்கும் ஈழவளநாட்டின் மீன்பாடும் தேனாடு மட்டக்களப்பு தன்னில் மண்முனை தென்மேற்கே நீர்வளம்,நிலவளம்,நெற்கதிர்,கல்வி செல்வம்,வீரம் தழைத்தோங்கும் மகிழடித்தீவு வைத்தியசாலையில் வந்தமர்ந்து இனிதருள் பொழியும் ஸ்ரீ கற்பக விநாயகருக்கு வருடாந்த உற்சவமானது நிகழும் மன்மதவருடம் ஆவணித்திங்கள் 08ம் நாள் 25.08.2015 செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி ஆவணித்திங்கள் 11ம் நாள் 28.08.2015ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 08.00மணிக்கு தீர்தோற்சவத்துடன் இனிது நிறைவு பெறும். எனவே பக்த அடியார்கள்; ஆசார சீலர்களாக ஆலயத்திற்கு வருகை தந்து ஸ்ரீ கற்பக விநாயகப்பெருமானின் அருள் பெற்று சகல செல்வயோகம் மிக்க பெருவாழ்வு பெறுவீர்களாக.
மகிழடித்தீவு, (பொது வைத்தியசாலை) ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த உற்சவம்
Reviewed by Unknown
on
August 25, 2015
Rating:

No comments: