Mountain View Mountain View

பிரமாண்டமாக நிறைவடைந்த ரந்தோலி பெரஹரா !




வரலாற்று சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவின் இறுதி நிகழ்வான ரந்தோலி பெரஹரா பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. 
இந்நிகழ்வில் சுமார் 30 நடனக் குழுக்கள் மற்றும் 70 யானைகள் பங்குபற்றியிருந்தன.

பெருந்திரளான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்ட இந்நிகழ்வை பார்வையிட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் வரும் பூரண பௌர்ணமி தினத்தில் நடைபெறும் ரந்தோலி பெரஹராவில், நாட்டில் சகல பகுதிகளிலுமிருந்து, பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

வரலாற்றுப் புகழ் மிக்க கண்டி எசல பெரஹராவின் முதலாவது ரந்தோலி பெரஹரா கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமாகியது குறிப்பிடத்தக்கது.














பிரமாண்டமாக நிறைவடைந்த ரந்தோலி பெரஹரா ! பிரமாண்டமாக நிறைவடைந்த ரந்தோலி பெரஹரா ! Reviewed by Unknown on September 02, 2015 Rating: 5

No comments: