Mountain View Mountain View

காதல் வாசம்..! காதல் கவிதை

உனக்காக நான் காத்திருந்தேனடி
உன் பார்வைப் பரிமாறலைத் தந்துவிட்டு
என்னைத் தவிக்க விட்டாயே
தத்தெடுத்த உன் இதயத்தோடு
பசியால் தவிக்கிறேனடி
 
உன் ஒற்றைச் சிரிப்பால்
உறங்காமலே தவித்து
கண்ணயரும் நேரமெல்லாம்
ஓடிவந்துன் முல்லைச் சிரிப்பாலே
உறக்கம் கலைய வைத்தாய்
 
உன் ஒற்றை வார்த்தைக்காக
தவம் கிடக்கிறேனடி
மௌனத்தை உன்னோடு
ஏன் வைத்திருக்கிறாய்
நமக்குள் ஏன் இந்த நெடுஞ்சுவர்
கூறடி பெண்ணே
 
மலைகளோடும்
அருவிகளோடும்
மலர்களோடும்
தினம் நான் பேசுவதால்
என் கண்களில்
கண்ணீர் பாறையாய் கனக்குதடி
 
காதல் வாசம் ததும்பும்
என் மன ஊற்றை
ஏனடி திறந்து விட்டாய்
உன்னை எத்தனை முறை நினைத்தாலும்
மனசு வலிக்கவில்லையடி
 
நீ இல்லாத அந்த ஒரு கணம்
சுமையாய் தெரிகிறதே
இதை உணரும் போது
ஒவ்வொன்றும் புதிதாய்த் தெரிகிறதே
என் உயிரோடு ஒட்டிக் கொண்டவள்
நீதானடி பெண்ணே
 
தேனிக்களின் சிறகு விளிம்பு
சிந்துகிற ஓசையடி நீ
உச்சிமலைக் குளிருக்குள்
உனக்காக காத்திருக்க முடிந்தாலும்
சருகுகளை அள்ளிவைத்து
தீ மூட்டியேனும் காத்திருப்பேனடி
 
என் சுவாசத்தின் உள்ளே
நீ மட்டும் உட்கார்ந்திருந்து
ஓவியம் தீட்டுகிறாய்
 
காதல் வாசம் வீசும்
உன் அதரங்களின் ஸ்பரிசங்களுக்காக
வாசமில்லா என் வாழ்கை வரவேற்பறையில்
நெஞ்சை பிழியும் சோகத்துடன்
உனக்காக காத்திருப்பேனடி பெண்ணே

காதல் வாசம்..! காதல் கவிதை காதல் வாசம்..! காதல் கவிதை Reviewed by Unknown on September 07, 2015 Rating: 5

No comments: