இலங்கையில் இதுவரை 2 ஆயிரத்து 173 எய்ட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும், அவர்களில் 73 பேர் சிறுவர்கள் எனவும் காலி வைத்தியசாலையின் பால்வினை நோய் விசேட நிபுணர் டாக்டர் திருமதி தர்ஷனி விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.
காலி கடவத்சத்தர பிரதேசசபையில் நடைபெற்ற மக்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கில் கலந்துகொண்டபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ள தகவல்களின்படி 2,173 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ள போதிலும் வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படாதவர்களின் எண்ணிக்கையுடன் சேர்த்தால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும், அது மூவாயிரத்தைத் தாண்டக்கூடும் எனவும் அவர் கூறினார்.
மேல் மாகாணத்திலேயே அதிகளவு நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வைத்தியர் தர்ஷனி விஜேவிக்கிரம சிறுவர்களும் இந்த நோய்க்கு ஆளாகி வருவது கவலைக்குரிய விடயம் என்று சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் 2,173 பேருக்கு எய்ட்ஸ்! - அதில் 73 பேர் சிறுவர்கள்
Reviewed by Unknown
on
October 13, 2015
Rating:
No comments: