Mountain View Mountain View

பிள்ளையான் கைது ஓர் அரசியல் பழிவாங்கல் ; தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனின் கைதானது வெறும் அரசியல் பழிவாங்கலுக்காகவே இடம்பெற்றிருப்பதாக அக்கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.



கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டமை தொடர்பாக தெளிவுபடுத்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு மட்டக்களப்பில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில்  திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரசாந்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிலரைத் திருப்திபடுத்துவதற்காகவா இவரைக் கைது செய்தார்கள் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறதாக தெரிவித்த அவர், நிச்சயம் அவர் நிரபராதியாக விடுதலையாவார் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும் கட்சியின் தலைவர் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்த அவர், எந்தக் குற்றத்திற்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார் என்பது இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்றும் கூறினார்.

இதேவேளை ஊடகங்களின் செயற்பாடு குறித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பிரசாந்தன் அதிருப்தி வெளியிட்டார்.

பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையுடன் தொடர்புபட்டுள்ளார் என்ற சந்தேகத்திலேயே இவர் கைது செய்யப்பட்டாா்.

கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இச் சந்திப்பில், பொருளாளர் ரி.தேவராஜன், உப செயலாளர் கே.யோகவேள், மகளிர் அணித் தலைவி செல்வி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிள்ளையான் கைது ஓர் அரசியல் பழிவாங்கல் ; தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பிள்ளையான் கைது ஓர் அரசியல் பழிவாங்கல் ; தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி Reviewed by Unknown on October 13, 2015 Rating: 5

No comments: