Mountain View Mountain View

மூதூர் கங்கைப் பாலத்தில் வாகன விபத்து; ஒருவர் பலி

திருகோணமலை மூதூர் கங்கைப் பாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர் மூதூர் பெரிய பாலத்தைச் சேர்ந்த மீராசாகிப் நசுர்தீன் எனும் 39 வயதுடைய நபரென மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியாவிலுள்ள தனது தாயைப் பார்த்துவிட்டு மூதூரை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வேளையில் முன்னால் சென்ற முச்சக்கர வண்டி மற்றும் எதிரே வந்த டிப்பர் வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பிரேதப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டன.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையினை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூதூர் கங்கைப் பாலத்தில் வாகன விபத்து; ஒருவர் பலி மூதூர் கங்கைப் பாலத்தில் வாகன விபத்து; ஒருவர் பலி Reviewed by Unknown on October 13, 2015 Rating: 5

No comments: