முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 5 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய யாழ். மாவட்ட ஆசிரியர்கள் சிலர் தமக்கான இடமாற்றத்தை வழங்ககோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இன்று திங்கட்கிழமை மாலை 2.30 அளவில் வட மாகாண கல்வி அமைச்சு முன்பாக யாழ். மாவட்ட ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
யாழ். மாவட்டத்தை சேர்ந்த 55 ஆசிரியர்கள் நீண்டகாலம் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் கடமையாற்றியுள்ளனர்.
இவர்களில் 22 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள போதும் மற்றைய 33 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் தமக்கு மாகாண கல்வியமைச்சு இடமாற்றம் வழங்கப்படதாக தெரிவித்து, கடிதம் அனுப்பியுள்ள போதும் வலயக்கல்வி திணைக்களம் இவர்களை விடுவித்து இடமாற்றத்தை வழங்காமைக்கு நியாயம் கேட்டு குறித்த ஆசிரியர்கள் இந்த கவனயீர்ப்பை நடத்தினர்.
எனினும் குறித்த ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பில் கல்வி திணைக்கள அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ். மாவட்ட ஆசிரியர்கள் தமக்கான இடமாற்றத்தை வழங்ககோரி கவனயீர்ப்பு போராட்டம்
Reviewed by Unknown
on
October 13, 2015
Rating:
No comments: