குருக்கள்மடத்தைச் சேர்ந்த மாணவி யோகானந்தராஜா அகல்யா அவர்கள் மட்/குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் கா.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கலைப் பிரிவில் தோற்றி மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் முதலிடத்தினையும்(1), தேசிய மட்டத்தில் இருபத்தினான்காவது (24) இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமது பாடசாலை ஆசிரியர்கள், நிருவாகத்தினர் போன்றோருக்கும் , தனியார் கல்வி ஆசிரியர்களுக்கும், தனக்கு ஆரம்ப வகுப்பில் இருந்து இன்று வரை கற்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்ததுடன், முக்கியமாக தனது பெற்றார்கள் சிவகௌரி, யோகானந்தராஜா ஆகியோருக்கும் இத் தருணத்தில் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
தமது பாடசாலை ஆசிரியர்கள், நிருவாகத்தினர் போன்றோருக்கும் , தனியார் கல்வி ஆசிரியர்களுக்கும், தனக்கு ஆரம்ப வகுப்பில் இருந்து இன்று வரை கற்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்ததுடன், முக்கியமாக தனது பெற்றார்கள் சிவகௌரி, யோகானந்தராஜா ஆகியோருக்கும் இத் தருணத்தில் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
அவருக்கு தமிழன் 24 குடும்பம் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் முதலிடத்தில் அகல்யா
Reviewed by Unknown
on
January 04, 2016
Rating:
No comments: