இன்று வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், ஹற்றன் ஹைலண்ஸ் கல்லூரியின் தமிழ் மாணவி, விஞ்ஞான பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஹற்றன் ஹைலண்ஸ் கல்லூரின் சந்தரன் சஜிதா என்ற மாணவியே 3A என்ற பெறுபேற்றைப் பெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளார். மேலும் அகில இலங்கை ரீதியில் 113ம் இடத்தினை பெற்றுள்ளார்
இவர் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.
பி.சந்தரன், கே.சுமதி தம்பதியரின் புதல்வியான இவரை, ஹற்றன் ஹைலண்ஸ் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
க.பொ.த. உயர்தர பரீட்சை நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மாணவி முதலிடம்!
Reviewed by Unknown
on
January 03, 2016
Rating:
No comments: